பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. நேரில் கண்ட உறவினர்கள் ஆத்திரத்தில்..
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. நேரில் கண்ட உறவினர்கள் ஆத்திரத்தில்..
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர், அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வஉசி நகரைச் சேர்ந்த மகேந்திரன் (40) என்பவர் லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். கடந்த சில தினங்களாக மகேந்திரன் தனது வீட்டின் அருகே வசிக்கும் 8ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுபோல் நேற்று முன்தினமும் அந்த மாணவிக்கு மகேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் சென்று மகேந்திரனை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். தகவலறிந்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களின் பிடியில் இருந்து மகேந்திரனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
newstm.in