சீமான் பயங்கரவாத கட்சி நடத்துகிறார்.பொங்கும் நடிகை
சீமானின் கட்சி பயங்கரமான கட்சி.எத்தனையோ நாள் என்னை அறையில் அடைத்து வைத்திருந்தார்கள். இது போல எத்தனையோ சித்திரவதைகள் அனுபவித்திருக்கிறேன். இனி இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதால் தான் தைரியமாக இதை பேச வந்திருக்கிறேன். எனக்கு ஆதரவாக இருக்கும் நண்பர்களே உனக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸிடம் ஆதரவு கேள் என்று அறிவுறுத்துகிறார்கள்.
சீமானுக்கும் தனக்குமான உறவை வெளிப்படுத்தி வந்த நடிகை விஜயலட்சுமி கடந்த வாரம் அவர் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் சீமான் தன்னை சித்திரவதை செய்ததாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அப்போது சீமான் தன்னுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டிருந்தார். சமூக வளைதலங்களில் பரவிய இந்த வீடியோ குறித்து சீமான் இது சாதாரணமான ஒன்று என்று கூறி முடித்துவிட்டார்.
சிமான் எதுவும் சொல்லாத நிலையில் அவர் கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை விஜயலட்சுமியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி காளியம்மாள் ஒரு மெடையில் வழக்கம் போல் விஜயலட்சுமியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு விஜயலட்சுமியும் சீமானுக்கும் தனக்குமான வீடியோ ஒன்றை வெளியிட்டு அதற்கு காரணமும் அளித்திருந்தர்.
அப்போது ஜெயலலிதா இருக்கும் வரை பெண்களுக்கு யாரும் தொல்லை தந்ததில்லை. மற்ற திமுக, பாஜக, காங்கிர கட்சிகளில் கூட பெண்களுக்கு தொந்தரவு கொடுக்க மாட்டார்கள். ஆனால் இங்கு தான் அச்சுறுத்தும் வகையில் மேடையில் இப்படி தாக்கி பேசுகிறார்கள். இந்த போராட்டம் கட்சிக்கும் எனக்கும் இல்லை. தனிப்பட்ட சீமானுக்கும் எனக்கும் நடக்கும் போராட்டம். எனக்கு பின்னால் எந்த கட்சியும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதோடு சீமானின் கட்சி பயங்கரமான கட்சி.எத்தனையோ நாள் என்னை அறையில் அடைத்து வைத்திருந்தார்கள். இது போல எத்தனையோ சித்திரவதைகள் அனுபவித்திருக்கிறேன். இனி இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதால் தான் தைரியமாக இதை பேச வந்திருக்கிறேன். எனக்கு ஆதரவாக இருக்கும் நண்பர்களே உனக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸிடம் ஆதரவு கேள் என்று அறிவுறுத்துகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி காளியம்மாளின் பேச்சை கேளுங்கள், இப்படியெல்லாம் மேடையில் பேசமுடியுமா? யார் அவருக்கு சொல்லி தந்தது என்று கேட்டிருக்கிறார்.
newstm.in