இந்த வீடியோவை ஷேர் பண்ணாதீங்க.. தமிழக போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு..!
இந்த வீடியோவை ஷேர் பண்ணாதீங்க.. தமிழக போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு..!
கோவில் இடிப்பு தொடர்பான வீடியோக்களை பரப்பி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம்பரம் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் வரதராஜபுரத்தில் அடையாறு நீர் வழிப் பாதையில் ஆக்கிரமிப்பில் இருந்த ஆஞ்சநேயர் கோவில் மற்றும் தேவாலயம் உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பேசு பொருளாகி விட்டது.
அந்தக் கோவில் அரசு ஆக்கிரமிப்பில் இருந்த காரணத்தினால் மட்டுமே அகற்றப்பட்டது. ஆனால், இதனை தவறாக சித்தரித்து பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவில் இடிப்பு தொடர்பான எந்த ஒரு வீடியோக்களையும் பரப்பி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவதூறு பரப்புவோர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்றும் தாம்பரம் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.