அதிர்ச்சி! பெண்கள் எதிர்ப்பு.. வைரமுத்துவுக்கு விருது கிடையாது?
அதிர்ச்சி! பெண்கள் எதிர்ப்பு.. வைரமுத்துவுக்கு விருது கிடையாது?
வைரமுத்து மீதான பாலியல் புகார் காரணமாக அவருக்கு ஓ.என்.வி., விருது வழங்க கூடாது என எதிர்ப்பு எழுந்ததால், அதுப்பற்றி மறு ஆய்வு செய்வதாக ஓஎன்வி பண்பாட்டு குழு அறிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி மீடூ மூலம் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக விருது கேரளாவில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு வழங்கப்படுவதாக இந்தாண்டு அறிவிக்கப்பட்டது.
இந்த விருதினை பெறுவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக வைரமுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் கேரளாவை பூர்விகமாக கொண்டவரும், தமிழில் பூ, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகையுமான பார்வதி, பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி., விருது வழங்கபட உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து டுவிட்டர் பதிவிட்ட அவர், ‛ ஓ.என்.வி., ஐயா எங்கள் பெருமைக்குரியவர். ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவருடைய பங்களிப்பு யாருடனும் ஒப்பிட முடியாதது.
அவரது சிறந்த பணியால் எங்களது இதயங்களும் மனங்களும் பயனடைந்துள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுவது மிகுந்த அவமரியாதைக்குரியது' என குறிப்பிட்டார்.
இந்தநிலையில் வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்ட இலக்கியத்திற்கான ஓஎன்வி விருது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என ஓஎன்வி பண்பாட்டு குழு அறிவித்துள்ளது. கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்குவதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டுள்ளது.
விருதுகள் குழுவின் பரிந்துரையின்படி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி தெரிவித்துள்ளது.
newstm.in