அதிர்ச்சி! நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதி!!

அதிர்ச்சி! நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதி!!

Update: 2021-12-05 08:50 GMT

ஏற்கனவே நாய், பூனை, சிங்கம், புலி என விலங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தற்போது நீர் யானைக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உலகமே கொரோனா வைரஸுடன் போராடி வருகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு விலங்குகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் தற்போது பெல்ஜியம் நாட்டில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பெல்ஜியம் நாட்டில் உள்ள ஆண்ட்வெர்ப் உயிரியல் பூங்காவை சேர்ந்த இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்

இதில் ஒரு நீர் யானையின் வயது 14, மற்றொரு நீர் யானையின் வயது 41 என உயிரியல் பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று எப்படி பரவியது என்பது தெரியவில்லை.

கொரோனா பாதித்த இரண்டு நீர் யானைகளும் நலமாக இருப்பதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரியல் பூங்காவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு நீர் யானைகளுக்கும் கொரோனா குணமான பின்னரே பூங்கா மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News