அதிர்ச்சி! மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கி வீடியோ எடுத்த கணவன்!!
அதிர்ச்சி! மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கி வீடியோ எடுத்த கணவன்!!
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் ஒருவர் கருகச்சால் காவல்நிலைத்தில் புகார் அளித்தார். அதில், கணவர் அவரது நண்பர் வீட்டில் நடைபெற்ற விழா ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குச் சென்ற பின்னர் அந்த நிகழ்ச்சிக்கு எதற்காக வந்துள்ளோம் என மனைவி கணவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த கணவர், தனது நண்பர்களுடம் உல்லாசமாக இருக்கும் படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
மீறினால், குழந்தைகளை கொன்றுவிடுவதாகவும் மிரட்டு பணிய வைத்துள்ளார். அதோடு இல்லாமல், மனைவி வேறு ஆண்களுடம் இருக்கும் அந்தரங்கத்தை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்தவீடியோவைக் காட்டி கடந்த 2 வருடமாக மனைவியை தனது சொந்த லாபத்திற்காக பலருக்கும் விருந்தாக்கியுள்ளார்.
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட இளம் பெண், கணவரின் கொடுமைகள் அதிகமானதால் தற்போது வேறு வழியின்றி, போலீஸில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இந்த கொடூர சம்பவத்தில் பலரும் தொடர்பு இருப்பதாக இளம் பெண் கூறியுள்ளார்.
இதனையடுத்து போலீஸார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதுவரை பெண்ணின் கணவர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
newstm.in