அதிர்ச்சி.. சென்னையில் ஒரே கல்லூரியில் 80 மாணவர்களுக்கு கொரோனா: 50 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி..!

அதிர்ச்சி.. சென்னையில் ஒரே கல்லூரியில் 80 மாணவர்களுக்கு கொரோனா: 50 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி..!

Update: 2022-01-06 12:33 GMT

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் 4,862 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் எம்.ஐ.டி. கல்லூரி விடுதியில் நேற்று 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து இன்று 80 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று ஏற்பட்ட 80 மாணவர்களில் 50 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் மேலும் பல மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அவர்களது பரிசோதனை முடிவும் இன்னும் வரவில்லை. எனவே, நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் கல்வி நிறுவனத்தில் முகாமிட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News