பல பேர் முன்னாடி மாணவன் செஞ்ச வேலை!! வெட்கத்தில் தலை குனிந்த மாணவி!
மாணவி கழுத்தில் மாணவன் தாலி கட்டுவது போல் நடித்து, செயின் அணிவிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செல்போன்களும் சமூக வலைதளங்களும். இவற்றால் எத்தனையோ பயன்கள் இருந்தாலும், அவைகளால் ஏற்படும் கலாச்சார சீரழிவுகளுக்கும் பஞ்சமில்லை. செல்போன்களின்
மாணவி கழுத்தில் மாணவன் தாலி கட்டுவது போல் நடித்து, செயின் அணிவிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செல்போன்களும் சமூக வலைதளங்களும். இவற்றால் எத்தனையோ பயன்கள் இருந்தாலும், அவைகளால் ஏற்படும் கலாச்சார சீரழிவுகளுக்கும் பஞ்சமில்லை. செல்போன்களின் பயன்பாடு அதிகரித்ததால் மாணவ-மாணவிகள் பள்ளி பருவத்திலேயே காதல் என்ற நெருப்பில் விழுந்து விட்டில் பூச்சிகளாய் தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.
பள்ளியில் எவ்வளவோ கட்டுப்பாடுகளை விதித்தாலும், எல்லை தாண்டும் மாணவர்களின் முடிவு துயரமானதாகவே அமைகிறது. கல்வி பயிலும் வயதில் மாணவிகள் தாயாகும் அவலமும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியிலும் மாணவ-மாணவிகளின் செயல்பாடுகள் கலங்க வைப்பதாகவே உள்ளது. பள்ளி மாணவி ஒருவருக்கு பள்ளி மாணவன் செயின் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் மாணவர் - மாணவிகள் இருவரும் பள்ளி சீருடையில் உள்ளனர்.
மேலும் அந்த மாணவன் செயினை அணிவித்ததும் அதனை தாலி போன்று வெட்கப்பட்டு ஏற்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 'இதுதானா.. இதுதானா' என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. இதனை தொடர்ந்து இந்த வீடியோ குறித்து விசாரித்த குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினர் அந்த இரண்டு பேரையும் கண்டு பிடித்துவிட்டனர்.
இது தொடர்காக இருவரிடமும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ விளையாட்டாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இதுபோன்ற செயலில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என்றும் மாணவ, மாணவியின் பெற்றோரிடம் அதிகாரிகள் கூறியதாகவும் கூறப்படுகிறது.
newstm.in