இல்லத்தரசிகளுக்கு சிறப்பு சலுகைகள்!? பட்ஜெட் தாக்கலுக்கு முன் ஓபிஎஸ்., விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
இல்லத்தரசிகளுக்கு சிறப்பு சலுகைகள்!? பட்ஜெட் தாக்கலுக்கு முன் ஓபிஎஸ்., விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்டார்.
இன்று தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், தனது வீட்டில் இருந்து புறப்பட்ட துணை முதல்வர் ஓபிஎஸ்., ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள இயற்கை ஆலமர விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
அதன் பின்னர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய புறப்பட்டு சென்றார். இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு வகையான சிறப்பு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தல் இன்னும் இரு மாதங்களில் வரவிருப்பதால் வாக்காளர்களை கவரும் விதத்தில் நிறைய சலுகைகளும், குறிப்பாக மகளிர் வாக்குகளை பெறும் நோக்கில் இல்லத்தரசிகளுக்கு சிறப்பு சலுகைகளும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.