தமிழ் திரையுலகில் பெரும் புகழ் கொண்ட நடிகை ஸ்ரீதேவி. பின்னர் இந்தி திரையுலகுக்கு சென்ற அவர் பாலிவுட் நடிகர் சோனி கபூரை மணந்து அங்கேயே செட்டிலானார். இந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்றப்போது கழிவறையில் அவர் உயிரிந்தார். எனினும், அவரது மரணத்தில் மரணம் தொடர்கிறது. 

தற்பேது அவர்களது இரண்டு மகள்களும் பாலிவுட் திரையுலகில் கலக்கத் தொடங்கியுள்ளனர். இந்தநிலையில், ஸ்டார் vs ஃபுட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஸ்ரீதேவியின் மூத்த மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர். அப்போது, புகைப்படக் கலைஞர்களிடம் இருந்து தப்பிக்க தான் படாதபாடு படுவதாக அவர் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஒரு முறை நான் ஜிம்முக்கு சென்றபோது வெளியே புகைப்படக் கலைஞர்கள் நின்றார்கள். அந்த நாள் நான் ஜிம்மிற்கு வந்திருக்கக் கூடாது. வீட்டில் சோகமாக இருக்க வேண்டிய நாள். அதனால் அன்றைய தினம் நான் புகைப்படக் கலைஞர்கள் கண்ணில் பட விரும்பவில்லை. என் காரை பின் வழியாக அனுப்பிவிட்டு, டிரெய்னர் நம்ரதாவின் காரில் நான் கிளம்பினேன்.

நான் புகைப்படக் கலைஞர்களுக்காக பாவப்படுகிறேன். இது தான் அவர்களின் வாழ்க்கை. ஆனால் அன்றைய தினம் அவர்கள் பைக்கில் எங்கள் காரை பின்தொடர்ந்து வந்தார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க நான் பலமுறை கார் டிக்கியில் ஒளிந்திருக்கிறேன். என் காரில் எப்பொழுதுமே ஒரு போர்வை இருக்கும் என்றார்.

பாலிவுட் பிரபலங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் புகைப்படக் கலைஞர்களின் கண்களில் இருந்து தப்ப முடியாது. இதனால் சில பிரபலங்கள் கடுப்பான சம்பவங்களும் நடந்திருக்கிறது, எனவும் அவர் கூறினார்.

newstm.in

Tags: