சிபிஐ புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் !

சிபிஐ புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் !

Update: 2021-05-26 08:18 GMT

சிபிஐ புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சிபிஐ இயக்குனராக இருந்த ரிஷிகுமார் சுக்லா ஓய்வுபெற்ற பின் அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது. இதனால் சி.பி.ஐ. இயக்குனர் பதவி கடந்த 3 மாதங்களாக காலியாக இருக்கிறது. கூடுதல் இயக்குனர் பிரவீன் சின்ஹா கூடுதல் பொறுப்பாக அந்தப் பதவியை தற்போது வகித்து வருகிறார்.

இதற்கிடையே, புதிய சி.பி.ஐ. இயக்குனரை தேர்ந்தெடுப்பதற்காக பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், சி.பி.ஐ. புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் 2 ஆண்டுகள் பணியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் முக்கிய விசாரணை பிரிவான சிபிஐ பல்வேறு சவாலான வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டு வருகிறது. சிபிஐக்கு என்று தனி அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற சிபிஐக்கு 3 மாதங்களாக இயக்குநர் நியமிக்கப்படாமல் இருந்தது பேசுபொருளானது. இந்த நிலையில் தற்போது சுபோத் குமார் ஜெய்ஸ்வால்  அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

Tags:    

Similar News