அயோத்தியில் மசூதியுடன் மருத்துவமனை.. அரசு வழங்கிய நிலத்தை ஏற்றது சன்னி வக்பு வாரியம்!!
அயோத்தியில் மசூதியுடன் மருத்துவமனை.. அரசு வழங்கிய நிலத்தை ஏற்றது சன்னி வக்பு வாரியம்!!;
அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்த நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதே சமயத்தில், மசூதி கட்டுவதற்காக சன்னி வக்பு வாரியத்துக்கு அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தருமாறு உத்தரவிட்டது. அந்த நிலத்தை தேர்வு செய்யுமாறு உத்தரபிரதேச அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, அயோத்தி மாவட்டம் சோஹாவல் தாலுகா தன்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கி கொடுத்தது. இது, அயோத்தி மாவட்ட தலைநகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில், அயோத்தி- லக்னோ நெடுஞ்சாலையில் உள்ளது. அந்த நிலத்தை ஒதுக்கியதற்கான கடிதத்தை சன்னி வக்பு வாரியத்திடம் அளித்தது. அதே சமயத்தில், அந்த நிலத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சன்னி வக்பு வாரியத்தை சில அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, அந்த 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வதாக சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சன்னி வக்பு வாரியத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்பின்னர் பேசிய அதன் தலைவர் பரூக்கி, நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். அதனால்தான் நாங்கள் மறுஆய்வு மனு தாக்கல் செய்யவில்லை. எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
newstm.in