சீருடையுடன் தீ மிதித்த காவல் கண்காணிப்பாளர்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று வெகுவிமர்சையாக விழா நடைபெறும். விழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் விடியவிடிய கூட்டம் அலைமோதும். ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

Update: 2020-02-27 22:15 GMT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள  மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று  வெகுவிமர்சையாக விழா நடைபெறும். விழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் விடியவிடிய கூட்டம் அலைமோதும். அதே போல் ஆண்டுதோறும் இக்கோவிலில் தீமிதி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். 


அந்த வகையில் நேற்று (26.02.2020) நடைபெற்ற தீமிதி திருவிழாவுக்காக ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காவல்துறையினரின் பாதுகாப்பை பார்வையிட வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தனது சீருடையுடன் அக்னிகுண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார். 
 

newstm.in

Tags:    

Similar News