கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சூர்யா- ஜோதிகா..!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சூர்யா- ஜோதிகா..!
தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா 2-ம் அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் அரசு தரப்பிலும், திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். நடிகர்கள், நடிகைகள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு அவை தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் சூர்யா தனது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவுடன் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சூர்யா, ஜோதிகா இருவரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அதற்கான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் வைலாகி வருகிறது.
#Vaccinated pic.twitter.com/3SJG9wYPFD
— Suriya Sivakumar (@Suriya_offl) June 22, 2021