அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

அரசு அலுவலங்களில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் அனைவரும் வேலை நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிய வேண்டுமென,அணியாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-28 12:51 GMT

அரசு அலுவலங்களில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் அனைவரும் வேலை நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை  அணிய வேண்டுமென,அணியாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தில் தங்கள் அடையாள அட்டைகளை அணிவதில்லை என்று பல புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.புகாரை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

                                             

இந்நிலையில் தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலாளர் சுவர்ணா,மாவட்ட கலெக்டர்களுக்கும் ,முதன்மைச் செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிவது கட்டாயம் அணியாதவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

Tags:    

Similar News