சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..!
சிறுவனின் வயது 102.. ரூ.500 லஞ்சம் தராததால் அதிகாரிகள் வெறித்தனம்..!
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள பெலா கிராமத்தை சேர்ந்த பவான்குமார் என்பவர் தனது மகன்களுக்கு பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார். 2 மாதங்களுக்கு முன்பு 2 வயது மகன் சான்கெட், 4 வயது மகன் ஆகியோருக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க கோரியிருந்தார். அப்போது, கிராம மேம்பாட்டு அதிகாரி சுசில் சந்த் அக்னிஹோத்ரி மற்றும் கிராமத் தலைவர் பிரவீன் மிஸ்ரா ஆகியோர் ஒவ்வொரு சான்றிதழுக்கும் ரூ.500 லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால், லஞ்சம் கொடுப்பதற்கு பவான்குமார் மறுத்து விட்டனர்.
newstm.in