70 ஆண்டுகளாக சேர்த்த சொத்தை 7 ஆண்டுகளில் தாரைவார்க்கிறது மத்திய அரசு.. வெளுத்துவாங்கிய ராகுல்காந்தி !!

70 ஆண்டுகளாக சேர்த்த சொத்தை 7 ஆண்டுகளில் தாரைவார்க்கிறது மத்திய அரசு.. வெளுத்துவாங்கிய ராகுல்காந்தி !!

Update: 2021-08-24 20:03 GMT

நாட்டில் 70 ஆண்டுகளாக இந்தியா சேர்த்த சொத்துக்களை ஏழே ஆண்டுகளில் பிரதமர் மோடி விற்றுவிட்டார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் எம்பியும் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனக்கு வேண்டப்பட்ட தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துக்களை பிரதமர் பரிசாக அளிக்கிறார். 42,000 கி.மீ நீளமுள்ள மின் வழித்தடங்களை தனியாருக்கு தாரைவார்க்கிறார். முதலில் வேலைவாய்ப்புகளை பறித்தார். பணமதிப்பிழப்பை அறிவித்தார். தற்போது நாட்டின் சொத்துக்களை பிரதமர் மோடி விற்கிறார்.

பிஎஸ்என்எல் செல்போன் கோபுரங்களை தனியாருக்கு விற்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. 25 விமான நிலையங்களை தனியாருக்கு விற்க பிரதமர் முடிவு செய்துவிட்டார். தேசிய சொத்துக்களை பணமாக்கும் திட்டம் என்ற பெயரில் நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உணவு தானிய கிடங்குகளையும் தனியாருக்கு விற்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. 

நாட்டின் கிரீடத்தில் உள்ள வைரங்கள் போன்ற தொழில்களை தனியாருக்கு பிரதமர் மோடி விற்கிறார். காங்கிரஸ் உருவாக்கிய தேசிய சொத்துக்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். மத்திய அரசின் திட்டத்தால் 3 அல்லது 4 நிறுவனங்கள் மட்டுமே பயன்பெறும். இதனால்  சிறு, குறு தொழில்துறையே அழிந்துவிடும். சிறு, குறு தொழில்துறை அழிவதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதே கேள்விக்குறியாகும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். குத்தகைக்கு விடுகிறோம் என்ற பெயரில் அரசின் சொத்துக்களை தாரைவார்க்கிறது மோடி அரசு. 

நீண்டகாலமாக நஷ்டத்தில் இருக்கும் தொழில்களை நாங்கள் தனியார்மயமாக்கினோம். குறைந்த சந்தைப் பங்கைக் கொண்ட நிறுவனங்களை நாங்கள் தனியார்மயமாக்கினோம். ஒரு குறிப்பிட்ட துறையில் தனியார் துறை ஏகபோகத்தை சரிபார்க்கும் திறனுடன் நாங்கள் அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கவில்லை. 

நாங்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிரானவர்கள் அல்ல ஆனால் எங்கள் தனியார்மயமாக்கல் திட்டத்தில் ஒரு தர்க்கம் இருந்தது. நாங்கள் மூலோபாயத் தொழில்களைத் தனியார்மயமாக்கவில்லை & ரயில்வேயை மூலோபாயத் தொழிலாக நாங்கள் கருதுகிறோம், ஏனெனில் அது லட்சக்கணக்கான & கோடிக்கணக்கான மக்களைக் கொண்டு செல்கிறது மற்றும் நிறைய பேரை வேலைக்கு அமர்த்துகிறது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

newstm.in

Tags:    

Similar News