பழம்பெரும் நடிகர் கவலைக்கிடம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி !!
பழம்பெரும் நடிகர் கவலைக்கிடம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி !!
பிரபல மூத்த பாலிவுட் நடிகர் திலீப்குமார் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1940-ல் தொடங்கி 2000-ன் முற்பகுதி வரை இடைவிடாது நடித்துக் கொண்டிருந்தவர் பாலிவுட் நடிகர் திலீப் குமார். நடிப்பு மட்டுமில்லாமல், தயாரிப்பு, திரைக்கதை எழுத்து, என இந்தித் திரையுலகில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டவர்.
2000 முதல் 2006 வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்தவர். இந்திய சினிமாவுக்கு இவரது சேவையைப் பாராட்டி 2015-ம் ஆண்டு 'பத்மவிபூஷன்' விருதை அளித்து இந்திய அரசு இவரை பெருமைப் படுத்தியுள்ளது. இதேபோல் பாகிஸ்தானின் உயரிய விருதான 'நிஸான் ஈ இம்தியாஸ்' என்ற விருதை பாகிஸ்தான் அரசு 1998-ல் வழங்கி இவரை சிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா முதல் அலையில் இவரது சகோதரர்கள் அஸ்லாம் கான் (88) மற்றும் இஷான் கான் (90) பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 வாரங்களுக்கு முன் நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் உடல்நிலை மோசமாகி சற்று கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்றும், நூறு ஆண்டுகளை கடந்தும் அவர் நலமுடன் வாழ வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.