மீண்டும் ஒரு செல்போனால் பறிபோன பள்ளி மாணவனின் உயிர்..!!
மீண்டும் ஒரு செல்போனால் பறிபோன பள்ளி மாணவனின் உயிர்..!!
சென்னை - அரக்கோணம் வழியில் உள்ள கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் தருண் செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். செல்போனில் பேசியபடி சென்றதால் அந்த தண்டவாளத்தில் ரயில் வருவதைக் கவனிக்கத் தவறிவிட்டார்.
வேகமாக வந்த ரயில் மோதியதில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் தருண் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.