ரூ.179 சாப்பாடு! ரூ.1,80000 அபராதம் கட்டிய முதியவர்!!
ரூ.179 சாப்பாடு! ரூ.1,80000 அபராதம் கட்டிய முதியவர்!!
வெறும் 179 ரூபாய் உணவுக்காக ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் கட்டும் பரிதாப நிலைக்கு முதியவர் ஒருவர் தள்ளப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த ஜான் பாபி என்ற முதியவர் தனது பேரக் குழந்தைகளுடன் காரில் சென்றுள்ளார். அப்போது, லுட்டான் பகுதியில் உள்ள மெக்டோனல்ஸ் கடைக்கு சென்ற அவர் பேரக் குழந்தைகளுடன் உணவு வாங்கியுள்ளார்.
அதன்பின்னர், காரில் பேரக்குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததால் சிறிது அசந்த அந்த முதியவர் காரிலேயே தூங்கியுள்ளார். இதுதான் அவருக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் கார் பார்க்கிங் செய்யப்பட்டிருந்ததால் விதிமுறைகளை மீறிய முதியவருக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெறும் ரூ.179 க்கு உணவு வாங்கியவருக்கு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in