சம்பளப் பணத்தை அரசுப்பள்ளிக்கு வழங்கிய அதிமுக அமைச்சர்!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வெல்லிங்டன் சீமாட்டி பள்ளிக்கு தனது ஊதியத்தில் இருந்து ஒரு லட்ச ரூபாய் தருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வெல்லிங்டன் சீமாட்டி பள்ளியின் முப்பெரும் விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Update: 2020-02-26 02:39 GMT

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வெல்லிங்டன் சீமாட்டி பள்ளிக்கு தனது ஊதியத்தில் இருந்து ஒரு லட்ச ரூபாய் தருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


வெல்லிங்டன் சீமாட்டி பள்ளியின் முப்பெரும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்துதரப்படும் என்றார். மேலும் பள்ளியில் உள்ள நூலகம் சீரமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தார். 


தனது ஊதியத்திலிருந்து பள்ளிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்க உள்ளதாக கூறிய அமைச்சர் ஜெயக்குமார், அதனை விளையாட்டு மேம்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறினார். மேலும் அதிமுக தலைமையிலான அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு சிறப்பான முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

newstm.in

Tags:    

Similar News