ராணுவ வீரர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்படுகிறது

அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் 58வது வயதில் ஓய்வு பெறுகின்றார்கள். ராணுவத்திலும் அதிகாரிகளின் ஓய்வு வயது 58 தான்.ஆனால் ராணுவ வீரர்கள் 38 வயதில் ஓய்வு பெறுகிறார்கள்.

Update: 2020-02-07 18:29 GMT

அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் 58வது வயதில் ஓய்வு பெறுகின்றார்கள். ராணுவத்திலும் அதிகாரிகளின் ஓய்வு வயது 58 தான்.ஆனால் ராணுவ வீரர்கள் 38 வயதில் ஓய்வு பெறுகிறார்கள்.

                                           


38 வயது வரை அரசாங்க இலவச வீடு,சம்பளம் என இருக்கும் வீரர்கள் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்கும் வயதிலேயே அரசாங்க வீட்டை காலி செய்து, சம்பளம் பாதியாகக் குறைக்கப்பட்ட பென்சனில் குடும்பத்தை கொண்டு செல்வது பெரும் சவாலாக இருக்கிறது. நாட்டிற்காக உழைத்த வீரர்கள் குடும்பச் சுமையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இதை கருத்தில் கொண்டு ராணுவ வீரர்களின் ஓய்வு பெறும் வயதையும் 58 ஆக மாற்ற பரிசீலணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று முப்படைத் தலைவர் பிபின் ராவத் தகவல் தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:    

Similar News