ஆசிரியர்கள் திட்டியதால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!
ஆசிரியர்கள் திட்டியதால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!
ஆசிரியர்கள் திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பூமியான்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரின் மகள் ஸ்வேதா கதிர்காமம் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து புதுச்சேரி பள்ளிகளில் கடந்த நவம்பரில் நேரடி வகுப்புகள் தொடங்கியது. உடல் நலக்குறைவு காரணமாக ஸ்வேதா பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து ஸ்வேதாகவை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவழைத்துள்ளனர். அப்போது பள்ளிக்கு ஏன் வரவில்லை என கூறி மாணவியை ஆசிரியர்கள் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையடைந்த ஸ்வேதா வீட்டிற்குச் சென்று கழிவறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாயார் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
பின்னர், அங்கு வந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in