ஒட்டுமொத்த வட்டாரத்தையே மிரட்டிய ஓநாய்.. வேறு வழியில்லாமல் சுட்டுத்தள்ளிய போலீசார் !!
ஒட்டுமொத்த வட்டாரத்தையே மிரட்டிய ஓநாய்.. வேறு வழியில்லாமல் சுட்டுத்தள்ளிய போலீசார் !!
மனிதர்களை வேட்டையாட முயற்சித்த ஓநாய் சுட்டுக் கொல்லப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் தென்கிழக்கு மாநிலமான கிராபண்டனில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஓநாயின் நடமாட்டம் அதிகரித்தது. ஓநாய் அதிகமான கால்நடைகளை கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். இந்த காரணமாக அப்பகுதியில் ஓநாய்கள் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக ஓநாயை விரட்ட ரப்பர் தோட்டாக்கள் மூலம் பயமுறுத்தவும், மின்னணு டிரான்ஸ்மிட்டருடன் பொருத்தவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில் நடந்து சென்ற ஒரு நபரை அந்த ஓநாய் பின்தொடர்ந்து சென்று அவரை கடித்து குதற முயன்றுள்ளது. எனினும் நல்வாய்ப்பாக அவர் ஓநாயிடம் இருந்து தப்பித்தார். இந்த நிலையில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, அவசர நடவடிக்கையாக ஓநாயைச் சுட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அந்த ஓநாய சுட்டுக்கொல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
பொதுவாக சுவிட்சர்லாந்து நாட்டில் ஓநாய்கள் ஒரு பாதுகாக்கப்பட்ட இனமாகும். இதனால் அங்கு ஓநாயை கொல்ல தடை உள்ளது. எனினும் கடுமையான நிபந்தனைகளின் கீழ் மட்டுமே அவை அழிக்கப்படும். ஓநாய்கள் ஏன் சுடப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களைக் கூறி, தனிப்பட்ட மாநிலங்களின் கூட்டாட்சி அதிகாரிகளிடமிருந்து அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஓநாயை கொலை செய்யலாம். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டு ஓநாயை கொன்றால் கடுமையான தண்டனை வழங்க அந்நாட்டு சட்டம் வழிவகுக்கிறது. சுவிட்சர்லாந்தில் தற்போது சுமார் 130 ஓநாய்கள் மற்றும் குறைந்தது 11 ஓநாய் கூட்டங்கள் உள்ளன. அவை ஆண்டுக்கு 300-500 செம்மறி ஆடுகளைக் கொல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in