கட்டுக்குள் அடங்காத கொரோனா.. இந்தியாவில் தினசரி பாதிப்பு 2.61 லட்சமாக உயர்வு !!

கட்டுக்குள் அடங்காத கொரோனா.. இந்தியாவில் தினசரி பாதிப்பு 2.61 லட்சமாக உயர்வு !!

Update: 2021-04-18 10:09 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படுவேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமுள்ளது. இதனால் பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு, பகுதிநேர ஊரடங்கு அறிவித்து வருகிறது. 

இந்த நிலையில் இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2.61 லட்சமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  1,47,88,109 உயர்ந்துள்ளது. 

புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,501 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,77,150 ஆக உயர்ந்துள்ளது.

 அதேநேரத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,28,09,643 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,38,423 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 18,01,316 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று வரை 12,26,22,590 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

newstm.in

 
 

Tags:    

Similar News