#Union Budget - 2020 முக்கிய அம்சங்கள்

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் இன்று காலை சரியாக 11 மணிக்கு கூடியது. மக்களவைக் கூடியதும், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையை தொடங்கினார்.

Update: 2020-02-01 17:57 GMT

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் இன்று காலை சரியாக 11 மணிக்கு கூடியது. 

மக்களவைக் கூடியதும், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையை தொடங்கினார்.

  • ஜி.எஸ்.டியால் சராசரியாக மாத குடும்ப செலவினங்களில் 4 சதவீதம் வரை மிச்சப்படுகிறது 
  • விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதே அரசின் இலக்கு 
  • விவசாய சந்தைகள் நவீனமாக்கப்படும் 
  • Apr 01 முதல் வரி சீரமைப்பு செயல்படுத்தப்படும் 
  • 20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும்.
  • தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்.
  • பால் பழங்கள் காய்கறிகள் கொண்டு செல்ல தனி ரயில் 
  • விவசாயிகளுக்கு 15லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு 
  • 2025 ஆம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்த இலக்கு 
  • தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12,300 கோடி 

  • விரைவில் புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் அமலுக்கு வரும்.

  • கல்வித்துறைக்கு 99,300 கோடி நிதி ஒதுக்கீடு 

  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் 2000 மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.

  • வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு

  • கல்வித்துறைக்கு 99,300 கோடி நிதி ஒதுக்கீடு 

  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் 2000 மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.

  • வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு

  • சென்னை பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் 

  • பொறியியல் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஒரு வருட இன்டர்ன்ஷிப் பயிற்சி

  • 2024க்குள் 100 மேலும் புதிய விமான நிலையங்கள்

  • மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைக்கு 22,000 கோடி ஒதுக்கீடு 

  • குழாய் வழியே எரிவாய்வு எடுத்து செல்லும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் 

  • பழங்குடியினர் நலனுக்காக 53000 கோடி ஒதுக்கீடு 

  • பெண்களுக்கான திட்டங்களுக்கு 28,600 கோடி ஒதுக்கீடு 

  • ஆதிச்சநல்லூரில்அருங்காட்சியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 

  • பழங்குடியின அருங்காட்சியகம் ராஞ்சியில் அமைக்கப்படும் 

  • நாடு முழுவதும் 4 அருங்காட்சியங்கள் அமைக்கப்படும் 
     

newstm.in

Tags:    

Similar News