உஷார்! நூதன முறையில் ஆண்களிடம் பணம் பறிக்கும் பெண்கள்!!

உஷார்! நூதன முறையில் ஆண்களிடம் பணம் பறிக்கும் பெண்கள்!!

Update: 2021-12-05 08:05 GMT

ஆண்களுக்கு வீடியோ கால் செய்து அவர்களை நிர்வாணமாக வரும்படி ஆசை வார்த்தை கூறி அதனை ரெக்கார்ட் செய்து பிறகு அதனைக் காட்டி பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் பெண்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த நிர்வாகி, ‘வூ ஆன்லைன் டேட்டிங் ஆப்பில்பதிவு செய்தார். பிறகு ஒரு பெண்ணோடு நட்பு கொண்ட அவர் தினமும் சாட் செய்து வந்தார். இந்நிலையில் ஒருநாள் அந்தப் பெண், அந்த நபரை நிர்வாணமாக வரும்படி கூறினார்.

அவரும் நிர்வாணமாக வந்ததை அடுத்து அந்த காட்சியை அந்தப் பெண் பதிவு செய்துவிட்டார். சில நாள் கழித்துவூ ஆன்லைன் டேட்டிங் ஆப்பிலிருந்து போன் செய்த ஒரு நபர் தங்களிடம் உங்களின் ஆபாச வீடியோ உள்ளது என்றும், அதை சமூக வலைதளங்களில் பரப்பாமல் இருக்க 50,000 ரூபாய் தரவேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து அந்த நபர் 5,000 ரூபாய் கொடுத்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகாரளித்தார்.

இதனையடுத்து நொய்டா காவல்துறை தகவல் தொழில்நுட்பப் பிரிவு (.டி) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து சைபர் க்ரைம் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Similar News