விஜய் சேதுபதி - நயன்தாரா படத்தில் இருந்து விலகிய சமந்தா- காரணம் இதுதான்..!
விஜய் சேதுபதி-நயன்தாரா படத்தில் இருந்து சமந்தா வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல் கூறப்படும் நிலையில் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதி-நயன்தாரா படத்தில் இருந்து சமந்தா வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல் கூறப்படும் நிலையில் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் எழுதி இயக்கவுள்ள படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. கடந்த பிப்ரவரி 14ம் தேதி இப்படத்திற்கான அறிவிப்பு வெளியானது.விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.
படம் தொடர்பான ஒவ்வொரு செய்தியும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், புதியதாக வெளியான செய்தி கோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. எனினும், இது மகிழ்ச்சியான செய்தி என்பதால் சமந்தாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துள்ள சமந்தா தற்போது கர்ப்பமாக உள்ளதாகவும், அதனால் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சமந்தா படத்தில் இருந்து விலகியது குறித்து பலரும் வருத்தம் தெரிவித்தாலும், அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனினும், இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை. இதுவரை படக்குழுவோ, சமந்தாவோ, நாக சைத்தன்யாவோ யாரும் இந்த தகவல் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இதனால் விரைவில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவிடம் இருந்து இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலம் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in