எச்சரிக்கை.. தமிழகத்தில் தீயா பரவுது தொற்று.. இதையெல்லாம் கண்டிப்பா கடைப்பிடிங்க..!
எச்சரிக்கை.. தமிழகத்தில் தீயா பரவுது தொற்று.. இதையெல்லாம் கண்டிப்பா கடைப்பிடிங்க..!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது; “இந்த அலையில் ஏற்படும் இறப்பை பெருமளவில் குறைக்க வேண்டும். கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
யாரை பரிசோதிக்க வேண்டும், யாரை பரிசோதிக்க வேண்டாம் என ஐசிஎம்ஆர் கொடுத்துள்ள வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். (அறிகுறி இல்லை என்றால் பரிசோதிக்க வேண்டாம்)
தொற்று உறுதியாகும் நபர்கள் தொடர்புடைய இடங்களில் கூடுதல் கவனம் தேவை. கோவிட் பராமரிப்பு மையங்கள் முழுவீச்சில் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இந்த வலியுறுத்தல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.