சசிகலாவுக்கு சென்னையில் பூ தூவி உற்சாக வரவேற்பு! பூரண கும்ப மரியாதை!!
சசிகலாவுக்கு சென்னையில் பூ தூவி உற்சாக வரவேற்பு! பூரண கும்ப மரியாதை!!;
சென்னை வந்த சசிகலாவுக்கு அமமுக தொண்டர்கள் பூ தூவி, பூரண கும்ப மரியாதை அளித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேற்று காலை 7.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா, கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் வழியாக சென்னை வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
23 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று அதிகாலை அவர் சென்னை வந்தார். அவர் வந்த வழியில் தொண்டர்கள் பூ தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்திற்கு சென்ற சசிகலா, அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து சின்னமலையில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தியாகராய நகர் வீட்டுக்கு வந்ததும் ஜெயலலிதா படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் போதிய ஓய்வுக்கு பிறகு சசிகலா அரசியலில் தீவிரமாக ஈடுபடுவார் என கூறப்படுகிறது.
newstm.in