பட்டிமன்ற புகழ் பாரதி பாஸ்கரின் தற்போதைய நிலை..? மனம் திறந்த பிரபலம்
பட்டிமன்ற புகழ் பாரதி பாஸ்கரின் தற்போதைய நிலை..? மனம் திறந்த பிரபலம்
பட்டிமன்றத்தின் மூலம் உலகத் தமிழர்களிடையே புகழ்பெற்றவர் பாரதி பாஸ்கர். கெமிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் எம்பிஏ படித்துள்ள இவர், உலகின் முன்னணி தனியார் வங்கியில் மிகப்பெரிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். பணிகளுக்கிடையே, சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து தொடர்ந்து பேசி வந்தார்.
சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் ராஜாவும், பாரதி பாஸ்கரும் இணைந்து பங்கேற்கும் பட்டிமன்றங்கள், பட்டிமன்ற பிரியர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், பாரதி பாஸ்கருக்கு கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி காலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாரதி பாஸ்கரின் மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து 22 நாள் தொடர் மருத்துவச் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். தற்போது நலமுடன் இருப்பதாகவும், மேடையில் உங்களைச் சந்திக்கிறேன் என பட்டிமன்றம் ராஜா யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் 22 நாள்கள் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளேன். தற்போது உடல்நலம் தேறி வருகிறது. பழைய தெம்புடனும், உற்சாகத்துடனும் மேடையில் உங்களைச் சந்திக்கின்ற நாளை உங்களைப் போலவே நானும் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
உங்களுக்காக நான் எதுவுமே செய்தது இல்லை. அப்படி இருக்கையில் பலரும் எனக்காப் பிரார்த்தனை செய்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. மீண்டும் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.