சிகரெட் பழக்கத்தினால இத்தனை ஆபத்தா? இன்று‘நோ ஸ்மோக்கிங் டே’!!
ஒவ்வொரு வருஷமும் மார்ச் 11ம் தேதி புகைப்பிடிப்பதால் ஏற்படும் ஆபத்து மற்றும் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நோ ஸ்மோக்கிங் டே (no smoking day) என்று சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புகைப்பழக்கம், கஞ்சா இலைகள் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை உட்கொள்வதால் இதயம், உடலின் ரத்தக் குழாய்கள், நுரையீரல்
ஒவ்வொரு வருஷமும் மார்ச் 11ம் தேதி புகைப்பிடிப்பதால் ஏற்படும் ஆபத்து மற்றும் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நோ ஸ்மோக்கிங் டே (no smoking day) என்று சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
புகைப்பழக்கம், கஞ்சா இலைகள் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை உட்கொள்வதால் இதயம், உடலின் ரத்தக் குழாய்கள், நுரையீரல் உட்பட பல உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை மக்கள் உணர்ந்து புகைப்பழகத்தை விட்டொழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவே நோ ஸ்மோக்கிங் டே!
குறிப்பாக நுரையீரலில் மாசுக்கள் சேர்ந்து, நுரையீரலின் செயல்பாட்டையே அடியோடு குறைத்து விடும் அபாயமும் புகைப்பழக்கத்தினால் ஏற்படுகிறது. அதோடு மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகளும் மாரடைப்பும் எளிதில் உண்டாக இந்த புகைப்பழக்கம் மிக முக்கியக் காரணமாகி விடுகிறது.
மேலும் புகை பிடிப்பவர்களின் அருகில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களும் அவரால் பாதிக்கப்படுகிறார்கள்.
newstm.in