பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த போன்களில் வாட்ஸ் அப் இயங்காது! நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த போன்களில் வாட்ஸ் அப் இயங்காது! நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
பிப்ரவரி 1ம் தேதி முதல் சில மாடல் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
உலகம் முழுவதும் பெரும்பாலானோர் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ மெஸேஜ்கள் என்று அதிகாலை குட்மார்னிங் செய்திகளில் துவங்கி நள்ளிரவு வணக்கங்கள் வரையில் உலகம் முழுவதுமே வாட்ஸ்-அப் செயலியில் இயங்கி வருகிறது எனும் அளவிற்கு அதன் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.
இது தவிர, உலகம் முழுவதும் உள்ளவர்களை வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக ஒன்றிணைத்து வரும் மாபெரும் பணியை இந்த வாட்ஸ் அப் செயலி செய்து வருகிறது. இந்நிலையில், வரும் பிப்ரவரி முதல் தேதியில் இருந்து ஆண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன், ஐபோன்களில் iOS 8, விண்டோஸ் மற்றும் அதற்கு முந்தைய மாடல் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் சேவையை மேம்படுத்தி நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை கொடுத்து வரும் வாட்ஸ் அப் நிறுவனம், பழைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் சேவையை நிறுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in