இனி விமானத்தில் பறக்க பணம் தேவையில்லை.. எல்லாமே பிட்காயின் தான் !!
இனி விமானத்தில் பறக்க பணம் தேவையில்லை.. எல்லாமே பிட்காயின் தான் !!
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் உள்ள மைக்கேடியா (Maiquetía) மாகாணத்தில் உள்ள தி சைமன் பொலிவர் இண்டர்நேசனல் ஏர்போர்ட்டுக்கு (The Simón Bolívar International Airport) வரும் பயணிகள் பிட்காயின் (Bitcoin), டேஷ் (Dash), பெட்ரோ (Petro) போன்ற கிரிப்டோகரன்சிகளை பயன்படுத்தி விமான டிக்கெட்டை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் எல் சால்வடோர் நாட்டில் பிட்காயினை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, தென் அமெரிக்க நாடான வெனிசுலா கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி, சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையத்தில் பயணிக்கும் பயனிகள் விரைவாக ஏர் டிக்கெட்டுகளை வாங்க அனுமதிக்கும் என அறிவித்துள்ளது.
சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையம் என்பதால் ஏராளமான பயணிகள் வந்துசெல்கின்றனர். அத்துடன் Maiquetía சர்வதேச விமான நிலையத்தின் கண்காணிப்பு தலைவருடன் இணைந்து அதற்கான புதிய கட்டணங்களையும் வரையருக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
Maiquetía விமான நிலையத்தின் இயக்குநர் ஃப்ரெடி போர்கஸ் இது குறித்து கூறுகையில், டிஜிட்டல் நாணயங்களை பயன்படுத்தி விமான நிலையத்தில் சர்வதேச தரங்களுடன் பின்பற்றி சரியான முறையில் கிரிப்டோக்களை உபயோகிக்கப்படும். ரஷ்யா, ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கும் இந்த முடிவானது பயனளிக்கும் என்று கூறியுள்ளார்.
கிரிப்டோகரன்சி என்பது என்பது டிஜிட்டல் பணம். ரூபாய்த் தாள்களைப் போலவோ, உலோக நாணயங்களைப் போலவோ அவற்றை நமது பாக்கெட்டுகளில் வைத்துக்கொள்ள முடியாது. அது இருப்பது இன்டெர்நெட்டில். வர்த்தகம் செய்வதும் இன்டர்நெட்டில்தான். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இதன் பயன்பாடு எண்ணிக்கை வேகமாக அதிகரித்திருக்கிறது.
newstm.in