ஆபாசப்படம் பார்த்ததாக மதுரையில் இளைஞர் கைது..! சமூக வலைதளத்தில் பரப்பியதாக புகார்

ஆபாசப்படம் பார்த்ததாக மதுரையில் இளைஞர் கைது..! சமூக வலைதளத்தில் பரப்பியதாக புகார்

Update: 2020-02-27 12:40 GMT

சிறார் ஆபாசப் படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த புகாரில் மதுரையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குழந்தைகள் ஆபாச படத்தை பார்ப்பதும். இணையத்தில் பதிவேற்றம் அல்லது பதிவிறக்கம் செய்வதும் குற்றம். இச்செயலில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து சைபர் க்ரைம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறார் ஆபாசப் படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாக முதன்முதலில் திருச்சியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்தொடர்ச்சியாக சென்னை உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த குமார் என்பவர், சிறார் ஆபாசப் படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம், சைபர் க்ரைம் அறிக்கையின் அடிப்படையில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ மற்றும் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்திய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News