அட கொடுமையே.. லிஃப்டில் பெண்ணின் முன் ஆடைகளை கழட்டி இளைஞரின் ஆபாச காரியம் !!

அட கொடுமையே.. லிஃப்டில் பெண்ணின் முன் ஆடைகளை கழட்டி இளைஞரின் ஆபாச காரியம் !!

Update: 2022-01-29 07:30 GMT

தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதற்கு தண்டனைகள் கடுமையாக்கியப்போதும் குறைந்தபாடில்லை. இதனால், ஆண்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டால் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்ற கருத்து பரவத்தொடங்கியுள்ளது. ஆனால் சென்னையில் இளம்பெண்ணுக்கு நடந்த பாலியல் தொந்தரவு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள பிரின்ஸ் அப்பார்ட்மெண்ட்டில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு காய்கறி டெலிவரி செய்வதற்காக சூளையைச் சேர்ந்த விக்னேஷ்(24) என்ற இளைஞர் வந்துள்ளார். ஆறாவது தளத்தில் உள்ள வீட்டில் காய்கறிகளை டெலிவரி செய்துவிட்டு கடைக்கு திரும்பியுள்ளார். இதற்காக 6ஆவது மாடியில் இருந்து லிஃப்டில் வரும்போது வீட்டு வேலை செய்துவரும் பெண் லிப்டில் ஏறி உள்ளார்.

இருவர் மட்டுமே லிஃப்டில் தனியாக இருந்ததால் அப்பெண்ணின் முன்பு இளைஞர் விக்னேஷ் தனது ஆடைகளை முழுவதுமாக கழட்டி ஆபாச செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அப்பெண் பெரும் அதிர்ச்சி அடைந்து சத்தம்போட்டுள்ளார். இதையடுத்து வீட்டு உரிமையாளரின் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இளைஞர் விக்னேஷை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Similar News