செம கெத்து! வரிசையில் நின்று வாக்களித்த ப்ரியா பவானி சங்கர்!

செம கெத்து! வரிசையில் நின்று வாக்களித்த ப்ரியா பவானி சங்கர்!

Update: 2021-04-06 18:48 GMT

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் பாதுகாப்பிற்காக துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக தேர்தல் களத்தில்  உள்ள மொத்த வேட்பாளர்கள் 3,998பேர். கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று காலை முதலே வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரையுலகினர், அரசியல் கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள்  என அனவரும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தமது ஜனநாயக கடமைகளை ஆற்றி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை  ப்ரியா பவானி சங்கர் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். வரிசையில் நின்று, முகக்கவசம் அணிந்து, சமூக விலகலை கடைப்பிடித்து கையில் கையுறை அணிந்து நடிகை ப்ரியா பவானி சங்கர் தமது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார். 

Tags:    

Similar News